பிரதமர் அலுவலகத்தை தகர்ப்பதாக தீவிரவாதிகள் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 26 ம் தேதி வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமரின்அலுவலகத்தைக் குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு லஸ்கார் ஈ தொய்பா செவ்வாய்க்கிழமை மிரட்டல்விடுத்துள்ளது.

ரம்ஜானையொட்டி ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டுள்ள சண்டை நிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய்கூறியதற்கு லஸ்கார் ஈ தொய்பா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலுக்குப் பின்னணியிலும், ஸ்ரீநகரில் ராணுவ தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்குப்பின்னணியிலும் இருப்பது லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகளே என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி செங்கோட்டையிலேயே தாக்குதல் நடத்தி விட்டோம். பிரதமர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்துவது ஒன்றும் பெரிய விஷயமல்லலஸ்கார் ஈ தொய்பா என்று கூறியுள்ளது.

மேலும் அவர்கள் கூறுகையில் சண்டை நிறுத்தம் அர்த்தமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதுதவிர காஷ்மீரிலிருந்து இந்தியா தனது ராணுவவீரர்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+