சென்னை வருகிறார் ஜனா.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தலைவராகப் பொறுப் பேற்றுள்ள ஜனா. கிருஷ்ணமூர்த்தி அப்பதவிக்குவந்த பிறகு முதல் முறையாக வரும் 30ம் தேதி சென்னை வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, பங்காரு லட்சுமணன், டெஹல்கா.காம் நிறுவனம் நடத்திய போலிபாதுகாப்புத் துறை ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியிழந்ததையடுத்து தலைவர் பதவிக்கு வந்தார். அப்பொறுப்புக்கு வந்த பிறகு முதல் முறையாக வரும் 30ம் தேதி அவர் தமிழகம் வருகிறார்.
30-ம் தேதி காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் வரும் கிருஷ்ணமூர்த்தி யை விமான நிலையத்தில் மாநிலபா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் இல. கணேசன் உள்ளிட்ட பலர் வரவேற்கின்றனர்.
பின்னர் ஊர்வலமாக அவர் அழைத்து வரப்படுகிறார். சென்னை சைதாப் பேட்டை கலைஞர் கருணாநிதி வரவேற்புவளைவு அருகே அவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு முடிந்தவுடன் அவர் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.