சிறப்பாக நடந்தது ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது. லட்சக்கணக்கானபக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று ஆன்மீகப் பெரியோர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கநாதர் கோவில் சித்திரைத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் 9ஆம் நாளான ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து தேருக்குப் புறப்பட்ட ஸ்ரீரங்கநாதர், 4 மணி முதல் 5.15மணி வரை மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
காலை 6.05 மணிக்கு ஸ்ரீரங்கநாதர் வீற்றிருந்த தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
நான்கு சித்திரை வீதிகளையும் வலம் வந்த தேர் காலை 9.50 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள்எழுப்பிய "கோவிந்தா "கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
பின்னர் 3.15 மணிக்கு தேரில் சவாரி செய்தவாறே நம்பெருமாள் ரேவதி மண்டபத்தை அடைந்தார். பின்னர்திருமஞ்சனம் கண்டருளிய ஸ்ரீரங்கநாதர் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார்.