புலிகள் மீது தடையை நீடிக்க ஜே.வி.பி. வலியுறுத்தல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்களது கோரிக்கையான தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாகஅறிவிக்கும் வரை, அவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாது என தீவிரவாத சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெருமூனாஅறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜனதா விமுக்தி பெருமூனாவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான விமல் வீரவன்சா இலங்கைபத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி:
தமிழ் ஈழ விடுதலை முன்னணி (டெலோ) இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.
ஆனால் விடுதலைப்புலிகள் தங்களது தனி ஈழம் கோரிக்கையைக் கைவிடும்வரை அவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாதுஎன்ற கொள்கையில் ஜனதா விமுக்தி பெருமூனா உறுதியாக இருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிகா அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது டெலோஅமைப்பும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரவு கையெழுத்திட்டது.
முன்னதாக, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஆளும்கட்சியான மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதையடுத்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசு மெஜாரிட்டியை இழந்தது.
ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக டெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள்கையெழுத்துப் போடுவதற்கு முன்பு, ஐக்கிய தேசிய கட்சியிடம் பல கோரிக்கைகளை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கைகளில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இருப்பினும் இந்தகோரிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறுகையில், ஆளும்கட்சிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ளநம்பிக்கையில்லாத் தீர்மானம் அதன் மீது நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் தோல்வியடையும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மக்கள் கூட்டணி அரசை இடறி விழச் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவுகள் ஒருநாளும் நனவாகாது.
இலங்கையில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு சந்திரிகா தலைமையிலான ஆட்சியே நடக்கும் என்றார்.
அதே போல் அதிபர் சந்திரிகா அளித்த பேட்டி ஒன்றில், மக்கள் கூட்டணியில் இருந்த சிறிய கட்சி தனது ஆதரவை வாபஸ்பெற்றுள்ளதால் மக்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். இலங்கையில் மக்கள் கூட்டணி கடந்த1994 ம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிறது.
இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் ஜூலை 3 வது வாரத்தில் நடைபெற உள்ளது என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications