புலிகள் மீது தடையை நீடிக்க ஜே.வி.பி. வலியுறுத்தல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்களது கோரிக்கையான தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாகஅறிவிக்கும் வரை, அவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாது என தீவிரவாத சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெருமூனாஅறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜனதா விமுக்தி பெருமூனாவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான விமல் வீரவன்சா இலங்கைபத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி:
தமிழ் ஈழ விடுதலை முன்னணி (டெலோ) இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.
ஆனால் விடுதலைப்புலிகள் தங்களது தனி ஈழம் கோரிக்கையைக் கைவிடும்வரை அவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாதுஎன்ற கொள்கையில் ஜனதா விமுக்தி பெருமூனா உறுதியாக இருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிகா அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது டெலோஅமைப்பும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரவு கையெழுத்திட்டது.
முன்னதாக, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஆளும்கட்சியான மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதையடுத்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசு மெஜாரிட்டியை இழந்தது.
ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக டெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள்கையெழுத்துப் போடுவதற்கு முன்பு, ஐக்கிய தேசிய கட்சியிடம் பல கோரிக்கைகளை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கைகளில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இருப்பினும் இந்தகோரிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறுகையில், ஆளும்கட்சிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ளநம்பிக்கையில்லாத் தீர்மானம் அதன் மீது நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் தோல்வியடையும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மக்கள் கூட்டணி அரசை இடறி விழச் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவுகள் ஒருநாளும் நனவாகாது.
இலங்கையில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு சந்திரிகா தலைமையிலான ஆட்சியே நடக்கும் என்றார்.
அதே போல் அதிபர் சந்திரிகா அளித்த பேட்டி ஒன்றில், மக்கள் கூட்டணியில் இருந்த சிறிய கட்சி தனது ஆதரவை வாபஸ்பெற்றுள்ளதால் மக்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். இலங்கையில் மக்கள் கூட்டணி கடந்த1994 ம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிறது.
இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் ஜூலை 3 வது வாரத்தில் நடைபெற உள்ளது என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications