விடுதலையை ஏற்பாரா கருணாநிதி?
பின்னர் மாறன் வந்தார். அவருடன் கடும் வாக்குவாதம் செய்த போலீசார் வார்த்தைகள் தடித்த பின்னர் தாக்கஆரம்பித்தனர். எனக்கு கை, கால், விலா, மார்பு என பல இடங்களில் அடி விழுந்தது.
தூக்குடா, இழுத்துட்டு வாங்கடா என்று பேச ஆரம்பித்த போலீசார் மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.மாடிப் படிகளில் இருந்து தரதரவென இழுத்துக் கொண்டு கீழே கொண்டு வந்தனர்.
எனக்கு மயக்கம் வந்துவிட்டது. காரில் அவர்கள் ஏற்றியது கூட நினைவில்லை. கார் போய்க் கொண்டிருந்தபோதுமுழிப்பு வந்தது. எங்கே போகிறோம் எனக் கேட்டேன். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
பின்னர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஒரு இருட்டரையில் போட்டு பூட்டிவிட்டுச் சென்றனர்.சுமார் 3 மணி நேரம் அங்கேயே வைக்கப்பட்டிருந்தேன். யாரும் வரவில்லை.
திடீரென ஒரு போலீஸ்காரர் வந்தார். என் பெயரைக் கேட்டார். என் அப்பா பெயர், வீட்டு முகவரி கேட்டார்.சொன்னேன். கையெழுத்து கேட்டார். போட்டேன். அவரும் போய்விட்டார். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து வந்துவாங்க போவோம் என்றார்.
வெளியே வந்தால் ஒரே கூட்டம் என் மனைவி தயாளு, ராஜாத்தி, மாறன், தொண்டர்கள் குழுமி இருந்தனர்.என்னை காரில் ஏற்றினர். உடன் மாறன் ஏறினார். அவரை தூக்கி வெளியில் எறிந்தனர். 6 மாதம் முன்பு தான்மாறனை காப்பாற்றி மருத்துவனையில் இருந்து கொண்டு வந்தோம். அதை நினைத்து அழுதேன்.
கார் தொடர்ந்து சென்றது. மாஜிஸ்திரேட் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு தொண்டர்கள் கூடிவிட்டதால்,நேராக வேப்பேரி காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் மாஜிஸ்திரேட் வீட்டுக்குகொண்டு சென்று ரிமாண்ட் செய்தார்கள்.
ஆனால், சிறையில் என்னை அதிகாரிகள் கொடுமைப்படுத்தவில்லை. நான் இதைச் சொல்வதால் அவர்களுக்குஎந்தக் கொடுமையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றார் கருணாநிதி.