சாவு-தற்கொலை: கருணாநிதி கவலை
சென்னை:
கருணாநிதி கைது சம்பவத்தை அடுத்து, இதுவரை மொத்தம் 40 பேர் அதிர்ச்சியாலும் தற்கொலை செய்து கொண்டும்உயிரிழந்துள்ளனர். இவர்களில் பல பேர் திமுக தொண்டர்கள்.
இந்நிலையில் 3 பேர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட, தஞ்சாவூரைச் சேர்ந்த உஷா என்பவர், கடந்த ஜூலை 1ம்தேதி மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
மேலும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக தொண்டர் முருகேசன், அங்குள்ள கழிவறையில் துணியைமுறுக்கி, தூக்குப் போட்டுக் கொண்டார். உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
இதேபோல், கரூர் மாவட்டம் குறித்தலை அருகேயுள்ள கீழப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை, கடந்த ஜூலை 1ம்தேதி தீக்குளித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரும் வியாழக்கிழமை இறந்தார்.
கருணாநிதி கவலை:
இறந்த திமுக தொண்டர்களை நினைத்து, தன்னுடைய அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்கருணாநிதி. இறந்தவர்களின் குடும்ப நிலை பற்றி அறிந்து, அக்குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை திமுகஅளிக்கும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.