நவீனமயமாகிறது சென்னை கடலோர காவல் படை
சென்னை:
சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய கடலோர காவல் படை நவீனப் படுத்தப்பட இருப்பதாக,கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் ராமேஸ்வர் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது:
20 வயதைத் தாண்டிய கப்பல்களை எல்லாம் "தலை முழுகி" விட்டு, 10 புதிய கப்பல்களை வாங்க கடலோர காவல்படை திட்டமிட்டுள்ளது.
கடலோர காவல் படையில் தற்போது 3 "ஹோவர்கிராப்ட்" கப்பல்கள் (ரோந்துக் கப்பல்கள்) உள்ளன. மேலும் 3கப்பல்கள் விரைவில் வரவிருக்கின்றன. அவற்றில் 2 கப்பல்கள், இலங்கை கடல் எல்லை அருகிலுள்ள மண்டபம்பகுதியில் ரோந்து சுற்றும்.
"இன்டர்செப்டர்" படகுகள் என்றழைக்கப்படும் மற்றொரு வகை விசைப் படகுகள், தற்போது சூரத்தில்தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 2 படகுகள், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னைக்கு வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் அவை கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படும்.
மேலும், பல நவீன வசதிகள் கொண்ட ஒரு படகு, கடலோர காவல் படைக்காக கோவாவில் தயாராகி வருகிறது.அடுத்த 2 ஆண்டுகளில் கடலோர காவல் பணியில் ஈடுபடத் துவங்கும்.
கடலோர காவல் படையில் தற்போது 17 "டோர்னியர்" வகை விமானங்கள் உள்ளன. இவை முக்கியமாக கடலோரபகுதியில் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, மேலும் 3 "டோர்னியா" வகைவிமானங்களை வாங்கவும் கடலோர காவல் படை முடிவு செய்துள்ளது.
கிழக்கு கடலோர பகுதியில், சென்னை தவிர, மேலும் 4 கடற்படை மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.அவற்றில் ஒன்று பாண்டிச்சேரியிலும் மற்றொன்று நாகப்பட்டினத்திலும் நிறுவப்படும். மற்ற 2 மையங்கள்,ஆந்திராவின் காக்கிநாடாவிலும், ஒரிசாவின் கோபால்பூரிலும் செயல்பட உள்ளன என்றார் ராமேஸ்வர் சிங்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications