ராஜ்யசபா எம்.பி பதவி: சோனியாவிடம் ஆதரவு கேட்கிறார் வாசன்
டெல்லி:
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் தமாகாவுக்கு ஆதரவு கேட்டு, திங்கள்கிழமை சோனியாகாந்தியை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார் தமாகா தலைவர் வாசன்.
ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலங்கள் முடிவதைத் தொடர்ந்து, வரும் 27ம் தேதி அதற்கான தேர்தல்நடக்கிறது.
தமிழகத்தில் மட்டும் 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 7ம்தேதி தொடங்கி, 14ம் தேதி முடிவடைகிறது. இதில் 4 பதவிகளை அதிமுக கைப்பற்றும். ஒரு இடம் திமுகவுக்குக்கிடைக்கும். இன்னும் ஒரு இடத்தை பிற கட்சிகள் துணையுடன் த.மா.கா. வெல்ல முடியும்.
த.மா.கா. தலைவர் வாசன் ராஜ்யசபா எம்.பியாக விரும்புகிறார். ஆனால் இதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கட்சிகளின் ஆதரவும் தேவை.
அதனால், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியுள்ளார் வாசன். காங்கிரஸ் கட்சியின்ஆதரவையும் கேட்க முடிவு செய்து, இதற்காக ஞாயிற்றுக்கிழமை வாசன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் வாசன். தொடர்ந்து இன்றும்அவரை சந்தித்து பேச இருக்கிறார்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இருந்தால் மட்டுமே வாசன் ராஜ்யசபா எம்.பி.யாக முடியும்.