தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு சந்திரிகா வருத்தம்
கொழும்பு:
கடந்த சுமார் 20 ஆண்டுகளாக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா இன்று வருத்தம் தெரிவித்தார்.
அதிபராகப் பதவி ஏற்று ஏழு ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு சந்திரிகாஉரையாற்றுகையில்,
கடந்த 1983ம் ஆண்டில் இனப் பிரச்சனை தோன்றியதிலிருந்து அதை அடக்குவதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது என்பது உண்மை தான்.
உண்மையிலேயே இலங்கை தமிழர்களுக்கு ஏராளமான இன்னல்கள் கொடுக்கப்பட்டன என்பதை நன்றாகஉணர்ந்துள்ளேன்.
இலங்கையில் வாழும் தமிழர்களைக் காப்பதற்கு அரசு தவறி விட்டது என்பதற்காக நான் என்னுடைய ஆழ்ந்தவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருக்கத்துடன் கூறினார் சந்திரிகா.
மேலும் சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப் போவதாகவும் சந்திரிகா அறிவித்தார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குஇடையூறு அளிக்கும் விதமாக சந்திரிகா அவ்வப்போது பேசி வந்தார்.
ஆனால் பல தடைகளையும் மீறி பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்து சந்திரிகா இன்று பேசியுள்ளதுபேச்சுவார்த்தையின் போக்கை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications