For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாலை எரிந்து சாம்பல்: ரூ. 10 கோடி பஞ்சு மூட்டைகள் தீயில் நாசம்

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் பல கோடி மதிப்புள்ளபஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.

சீதாபுரம் நான்கு ரோடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சுமில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மூட்டைகள்அடுக்கி வைக்க 5 கிட்டங்கள் உள்ளன. பல கோடி மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

இன்று அதிகாலை இங்குள்ள ஒரு கிட்டங்கியில் தீ பிடித்துக் கொண்டது. மிக வேகமாக வீசிய காற்றால் தீஅடுத்தடுத்த கிட்டங்கிகளுக்கும் பரவியது. இசில் 5 கிட்டங்களிலும் இருந்த 20,000 பஞ்சு மூட்டைகளும் எரிந்துசாம்பலாயின.

இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.

சுமார் 10 மணி நேரம் போராடித் தான் தீயணைப்புப் படை வீரர்களால் தீயை அணைக்க முடிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X