ஸ்ரீ தேவியின் 8 மாடிக் கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
நடிகை ஸ்ரீதேவி கட்டி வரும் 8 மாடிக் கட்டடத்தின் முதல் நான்கு மாடிகளை இடித்துத் தள்ள சென்னை மாநகராட்சிஎடுத்த நடவடிக்கை சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவியும், சாந்தி பில்டர்ஸ் என்ற நிறுவனம் இணைந்து சென்னை மயிலாப்பூர் சி.ஐடி. காலனி பகுதியில்,8 மாடிக் குடியிருப்பை கட்டின. இதில் 4 தளங்களுக்கு மட்டுமே முறையான அனுமதி வாங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 4 மாடிகளும் அனுமதியின்றி கட்டியுள்ளனர்.
இதனால் கட்டடம் வலு தாங்காமல் ஆட ஆரம்பித்தது. ஒரு முக்கிய தூண் இடிந்து விழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் புகார் கொடுக்கவே, கட்டடத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முதல் நான்குதளங்களை இடிக்க உத்தரவிட்டனர்.
இடிக்கும் பணியும் ஆரம்பித்து. ஆனால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி சார்பில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடிப்பதற்கு இடைக் காலத் தடை விதித்தது. பின்னர் 3பொறியாளர்கள் கொண்ட குழுவை நியமித்து ஆராய உத்தரவிட்டது.
இந்தக் குழு கட்டடத்தை ஆய்வு செய்து, கட்டடம் வலுவிழந்த நிலையில் அபாயகரமானதாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து நான்கு தளங்களை இடிக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைசரியானதே என்று நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து இடிப்புப் பணி மீண்டும் தொடங்கவுள்ளது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications