குணா குகையில் விழுந்து மீண்ட கேரள இளைஞர்!
கொடைக்கானல்:
கொடைக்கானல் குணா குகையில் விழுந்து 5மணி நேரப் போராடட்த்துக்குப் பின்னர் பத்திரமாகமீட்கப்பட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஓவியர்.
கொடைக்கானலில் உள்ள ஒரு மலை குகையில் கமல்ஹாசனின் குணா படம் எடுக்கப்பட்டதால், அந்த குகைக்குகுணா குகை என்று பெயர் ஏறப்பட்டது. மிகவும் அபாயகரமான இந்த குகையில் விழுந்தவர்கள் யாரும்இதுவரை உயிர் பிழைத்ததில்லை.இதுவரை இந்த குகையில் 50 பேர் விழுந்துள்ளனர். ஆனால் யாருமே உயிருடன் மீட்கப்பட்டதில்லை. உடல்கள்கூட கிடைக்காதாம். அந்த அளவுக்கு அபயாகரமான இந்த குகையில் விழுந்த கேரளவைச் சேரந்த ஓவியர்ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (25). தனது நண்பர்களுடன் கொடைக்கானல் வந்த சுபாஷ்,தனது நண்பர்கள் சசி உள்ளிட்டோருடன் குணா குகையை பார்க்க வந்தார்.
100 அடி ஆழம் உடைய அந்த குகைக்குள் இறங்கிப் பார்க்க ஆசைப்பட்ட சுபாஷ் கால் தடுமாறி உள்ளேவிழுந்து விட்டார். பதறிய நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரி திருநாவுக்கரசுதலைமையில் வனத்துறை ஊழியர்களும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து சுபாஷை காப்பாற்றமுயற்சித்தனர்.
![]() |
குகைக்குள் இறங்கினால் தான் அவரது நிலை தெரியும் என்பதால் உள்ளே இறங்க நண்பர்கள் வலியுறுத்தினர்.ஆனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல பயந்தனர். இதையடுத்து சசி தானே உள்ளே இறங்க முடிவுசெய்தார்.
இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு சசி மெதுவாக உள்ளே இறங்கினார். 60 அடி ஆழத்தில் சென்ற போதுசுபாஷ் ஒரு பாறை மீது விழுந்து கிடப்பதைப் பார்த்த அவர் தனது நண்பர் உயிருடன் தான் இருப்பதாக சப்தம்போட்டார்.
ஆச்சரியமடைந்த தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து உள்ளே இறங்கினர். பின்னர் சுபாஷை சசி தனது உடலுடன்இறுக்கமாக கட்டிக் கொண்டார். அவர்களை தீயணைப்புப் படையினர் மெதுவாக மேலே இழுத்தனர். மயங்கியநிலையில் இருந்த சுபாஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்துக்குப்பின்னர், சுபாஷ் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவரது நண்பர்கள் சந்தோஷமடைந்தனர்.
சசியின் துணிச்சலை பாராட்டினர். மரணக் குழியான குணா குகைக்குள் விழுந்து உயிர் பிழைத்த முதல் நபர்சுபாஷ் தான் என்று தீயணைப்புப் படையினர் வியப்புடன் தெரிவித்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு













Click it and Unblock the Notifications