நியூசிலாந்து-விமானத்தை கடத்த முயன்ற பெண்; விமானிகளுக்கு கத்திக் குத்து
நியூசிலாந்தின் பிளன்ஹைம் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஈகிள் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து காக்பிட் நோக்கி சென்றார்.
தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் விமானிகளை மிரட்டினார்.
ஆனால் மிரட்டலுக்கு விமானிகள் பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். இதில் தலையிலும் கழுத்திலும் விமானிகளுக்கு கத்திக் குத்து விழுந்தது. விமானிகள் அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர்.
ரத்தம் சொட்டிய நிலையில் விமானத்தை கிறிஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினர் விமானிகள். இதையடுத்து உள்ள புகுந்த போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ஏன் விமானத்தை கடந்த முயன்றார் என்று விசாரணை நடக்கிறது. அவர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிளன்ஹைம் நகரில் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கத்தியுடன் அவர் விமானத்துக்குள் நுழைய முடிந்துள்ளது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடு வானில் இந்தப் பெண்ணால் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர்.