கோயில் காவலாளிகளை தாக்கி நகை-பணம் கொள்ளை
செங்குன்றம்: கோயில் காவலாளிகளை அரிவாளால் வெட்டிவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
செங்குன்றம் அருகே திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ளது பிடாரி எச்சாத்தமன் கோயில்.
கோவில் காவலாளிகளான முத்து (60), அவரது தம்பி மணி (55) ஆகியோர் நேற்றிரவு கோவில் வெளிப்புற கேட்டை பூட்டி விட்டு கோயிலுக்குள் படுத்திருந்தனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் சுமார் 6 பேர் கொண்ட கும்பல் கோயில் கேட்டை உடைத்துக் கொண்டு கோவிலுக்குள் புகுந்தது. சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்த மணியை கொள்ளையர்கள் சரமாரியாக வெட்டினர்.
தலை, கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த மணி அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை காப்பாற்ற முயன்று முத்துவையும் கொள்ளையர்கள் வெட்டினர்.
படுகாயங்களுடன் வெளியே ஓடிய முத்துவை வாயிலில் காவலுக்கு நின்றிருந்த கொள்ளையர்கள் பிடித்து கொண்டனர்.
இதையடுத்து உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்த அந்தக் கும்பல் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயின், 1 பவுன் விபூதி பட்டை உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
இரவு 2.30 மணியளவில் முத்து ஊருக்குள் சென்று நடந்த விபரத்தை சொன்னார். ஊர் மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தினர். அந் நாய் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications