தூத்துக்குடி அருகே உருவாகும் விமான தளம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் கடந்த 1941ம் ஆண்டு முதல் ராணுவ விமான தளம் செயல்பட்டு வந்தது. இரண்டு ரன்வேக்களை கொண்ட இந்த விமான படைதளத்தின் நுழைவு வாயில் பகுதியில் இரண்டு ஆலமரங்கள் இருந்ததால் இது இரட்டை ஆலமர ஏர்போர்ட் என அழைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பாரான்றி விடப்பட்ட இந்த விமானப்படை தளம் அப்பகுதியை சேர்ந்த பலரால் ஆக்கிராமிக்கப்பட்டதால் மொத்த பரப்பான 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் பாதிக்கு மேல் விவசாய நிலங்களாக மாறியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் இதனை இந்திய விமான படை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த ஏர்போர்ட்டை புதுப்பித்து மீண்டும் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விமான படை தளத்தை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக விமானபடை அதிகாரிகள் அங்கு பலமுறை ஹெலிகாப்டர்கள், ராணுவ சிறிய விமானங்களை தரையிறக்கி ஆய்வு செய்தனர். இதுவரை விமானப் படை அதிகாரிகள் 4 கட்டமாக ஆய்வு செய்துள்ளனர்.
நேற்று சிவில் மற்றும் விமானபடை விங் காமண்டர் சிஆர் பிரசாத், பாதுகாப்பு அமைச்சக அதிகாரி வெங்கட் நாகிரெட்டி, நிர்வாக அதிகாரி சமீர் அலி உள்ளிட்டோர் தனி ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தனர்.
அவர்கள் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலைய விரிவாக்க பணியின் போது விமானப் படைக்கு நிலம் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும், அங்கு 61.75 ஏக்கர் பரப்பளவில் புதிய விமானபடைதளம் அமைக்கப்படுகிறது என்றும் அதற்கான இடத்தை பார்வையிட வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் விமானபடை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் பழனியாண்டி அதே ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்று கடம்பூர் இரட்டை ஆலமர ஏர்போர்ட்டை வானில் வட்டமிட்டபடியே ஆய்வு செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications