தமிழர்களின் உணர்ச்சிக்குரல் தந்திகளாக குவியட்டும்: ஜெகத்ரட்சகன்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக்குரலாகும். அந்த உணர்ச்சிக்குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
இலங்கையில் சிங்கள அரசு தன் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
டி9 பாதையை வெகுநாட்களுக்கு முன்பே சிங்கள அரசு மூடிவிட்டதால் தமிழீழ மக்களுக்கு உணவு, உடை போன்ற தேவையான பொருட்களை கூட கிடைக்காத நிலை நீடிக்கிறது.
கிளிநொச்சியில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் இப்போது அகதிகளாக தெருக்களில் வாழந்த்து கொண்டிருக்கின்ரனர். பசியோடும் பட்டினியோடும் அந்த மக்கள் போருக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
உலகிலேயே தன் சொந்த மக்களை பட்டினிபோட்டு அவர்களின் மீது பீரங்கித் தாக்குதலையும் நடத்தி கொண்டிருக்கின்ற ஒரே அரசு இலங்கை பேரினவாத அரசாகத்தான் இருக்க முடியும்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தெருக்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது நம் இதயம் கனக்கிறது.
இந்த கொடூர சூழலில் இலங்கை பேரினவாத அரசுக்கு ஆதரவு தருவதையும் அவர்கள் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை மூலம் தமிழீழ சிக்கலுக்கு விடிவு காணத்தக்கத நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளின்படி நம் கட்சியினர் அனைவரும் பிரதமருக்கு தந்திகளை அனுப்புமாறு அன்புடனே வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும்.
கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்வு, உணர்ச்சிக்குரலாகும். அந்த உணர்ச்சிக்குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications