தமிழர்களின் உணர்ச்சிக்குரல் தந்திகளாக குவியட்டும்: ஜெகத்ரட்சகன்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக்குரலாகும். அந்த உணர்ச்சிக்குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
இலங்கையில் சிங்கள அரசு தன் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
டி9 பாதையை வெகுநாட்களுக்கு முன்பே சிங்கள அரசு மூடிவிட்டதால் தமிழீழ மக்களுக்கு உணவு, உடை போன்ற தேவையான பொருட்களை கூட கிடைக்காத நிலை நீடிக்கிறது.
கிளிநொச்சியில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் இப்போது அகதிகளாக தெருக்களில் வாழந்த்து கொண்டிருக்கின்ரனர். பசியோடும் பட்டினியோடும் அந்த மக்கள் போருக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
உலகிலேயே தன் சொந்த மக்களை பட்டினிபோட்டு அவர்களின் மீது பீரங்கித் தாக்குதலையும் நடத்தி கொண்டிருக்கின்ற ஒரே அரசு இலங்கை பேரினவாத அரசாகத்தான் இருக்க முடியும்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தெருக்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது நம் இதயம் கனக்கிறது.
இந்த கொடூர சூழலில் இலங்கை பேரினவாத அரசுக்கு ஆதரவு தருவதையும் அவர்கள் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை மூலம் தமிழீழ சிக்கலுக்கு விடிவு காணத்தக்கத நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளின்படி நம் கட்சியினர் அனைவரும் பிரதமருக்கு தந்திகளை அனுப்புமாறு அன்புடனே வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும்.
கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்வு, உணர்ச்சிக்குரலாகும். அந்த உணர்ச்சிக்குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications