தமிழர்கள்: ராஜபக்சேவுக்கு பான்-கி-மூன் கோரிக்கை

அப்பாவித் தமிழ் மக்களை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அப்போது ராஜபக்சேவை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொலைபேசி மூலம் ராஜபக்சேவைத் தொடர்பு கொண்ட பான் கி மூன், போர் நடை பெறும் பகுதியிலிருந்து அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்.
அப்பாவி மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை என்று ராஜபக்சேவை பான் கி மூன் வலியுறுத்தியதாக மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸ் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் வசம் தற்போது உள்ள குறுகிய நிலப்பரப்பில் சுமார் 2 லட்சம் அப்பாவி மக்கள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜெனரல் ஜான் ஹோம்ஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.
பாதுகாப்பு வளையப் பகுதியில், இலங்கை ராணுவம் பெரும் தாக்குதலை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் குழந்தகைள் மையம் ஒன்றை ராணுவம் குண்டு வீசித் தாக்கியதில் 80 குழந்தைகள் உள்பட 139 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
ஒரே நாளில் 322 தமிழர்கள் படுகொலை...
இதற்கிடையே பாதுகாப்பு வளையப் பகுதியி்ல் இலங்கை தனது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 322 தமிழர்களை அது கொன்று குவித்துள்ளது.
விடுதலைப் புலிகளை மிக குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விட்ட ராணுவம், தற்போது 2 லட்சம் பேர் முடங்கிப் போயிருக்கும் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பலியாகும் அப்பாவிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 139 பேரைக் கொன்ற இலங்கைப் படைகள் நேற்று ஒரே நாளில் 322 தமிழர்களை கொன்றுள்ளது.
புது மாத்தளன், அம்பலவன் பொக்கனை, வளையன் மடம், கரையான் முள்ளி வாய்க்கால், வெள்ள முள்ளி வாய்க்கால் ஆகிய கிராமங்கள் பாதுகாப்பு பகுதிக்குள் உள்ளன.
இந்த குறுகிய பகுதிக்குள் 2 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளும் இங்குதான் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு மற்றும் மேற்கில் கடல் சூழ்ந்து நீண்ட தீவு போன்ற அமைப்பில் பாதுகாப்பு பகுதி உள்ளது. மேற்கே புதுக்குடியிருப்புக்கு கிழக்கு பகுதியில் குறுகிய நிலப்பரப்பு மட்டுமே மற்ற இடங்களுக்கு செல்லும் பாதையாக அமைந்துள்ளது.
புதுக்குடியிருப்பை பிடித்த ராணுவம் இந்த பாதையை சூழ்ந்து நிற்கிறது. வடக்கு பகுதியில் புது மாத்தளன் என்ற இடத்தில் இன்னொரு படையும், தெற்கில் வடுவக்கால் என்ற இடத்தில் மற்றொரு படையும் நிற்கின்றன. கிழக்கு பகுதியில் உள்ள கடலில் கடற்படை நிற்கிறது. இப்படி நாலாபுறமும் இலங்கைப் படைகள் சூழ்ந்துள்ளன.
நேற்று ராணுவம் நிலை கொண்டிருந்த இடத்தில் இருந்து முன்னேறி பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்தது. அவர்களை உள்ளே வர விடாமல் தடுத்து விடுதலைப் புலிகள் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இந்த ஆத்திரத்தில் பாதுகாப்பு பகுதியில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடுகிறது ராணுவம். பீரங்கி மூலமும் குண்டு வீசுகின்றனர். இதன் மூலம் என்றுமே இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 322 தமிழர்கள் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பாதுகாப்பு பகுதிக்குள்ளேயே இப்போது சண்டை நடப்பதால் சாவு எண்ணிக்கை இனி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தியும் அதை கண்டுகொள்ளாமல் சிங்கள ராணுவம் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications