கருணாநிதியின் சுருதி குறைகிறது-ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுக அரசின் நிலைப்பாடு நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவதையும்,
இப்பிரச்சினையில் கருணாநிதியின் சுருதி நாளுக்கு நாள் இறங்கிக் கொண்டே வருவதையும் பார்க்கும்போது, தமிழக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து இந்த அரசுக்கு அடியோடு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தன் கட்சியினுடைய நிலையை வெளிப்படுத்தும் வகையில் மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக 21.10.2009 அன்று உரத்த குரலில் கூறிய கருணாநிதி முல்லைப் பெரியாறு பகுதியில் கேரளாவின் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய புதிய அணையை கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பணியை நடத்த கேரள அரசுக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷை கண்டிக்கும் வகையில் நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்தில், தானே கலந்து கொள்ளப் போவதாக வீரதீரமான அறிவிப்பை வெளியிட்டார்.
மறுநாளே, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராசாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சிபிஐ சோதனை நடத்துகிற செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து ஒரே நாளில் கருணாநிதி தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டுவிட்டார். மதுரையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டம் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசையோ அல்லது மத்திய அரசையோ கண்டிக்கும் நிகழ்ச்சி அல்ல என்று மெல்லிய குரலில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக, புதிய அணை கட்ட ஏற்பாடு செய்யும் கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு கண்டனப் பொதுக் கூட்டம்தான் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “கேரளாவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததற்காக ஜெயராம் ரமேஷை எதிர்த்து திமுக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தும்போது, ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஏன் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தக்கூடாது?" என்று ஒரு மூத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் (ஈவிகேஎஸ் இளங்கோவன்) வினவினார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், “நீண்ட நாட்களுக்கு முன்பே புதிய அணை கட்டுவதற்கான ஆய்விற்கு தன்னுடைய ஒப்புதலை அளித்துவிட்டார் கருணாநிதி. தற்போது தேவையற்ற குழப்பங்களை, வீணான பரபரப்புகளை ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
28.10.2009 அன்று இரவுதான் முல்லைப் பெரியாறு வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதை தனக்கு வசதியாக நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
முல்லைப் பெரியாறு வழக்கு நீண்ட நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி, மதுரையில் நடக்கவிருந்த கண்டனப் பொதுக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.
அதே சமயத்தில், சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்தபோதே அதை எதிர்த்து 'பந்த்" நடத்தியதை கருணாநிதி வசதியாக மறந்துவிட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications