நிர்வாகிகள் சம்பளத்தைக் குறைக்கிறது பிபிசி!

முதல் கட்டமாக, 100 மூத்த, அதிக சம்பளம் பெறும் நிர்வாகிகள், பணியாளர்களின் சம்பளத்தில் கைவைக்கப் போகிறதாம்.
இந்த 100 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளின் சம்பளம் இங்கிலாந்து பிரதமரின் சம்பளத்தைவிட அதிகமாம். இந்தப் பட்டியலில் உள்ள ஊழியர்கள் ஆண்டுக்கு 199316 பவுண்டுகள் பெறுகிறார்களாம். போனல் மற்றும் இதர வசதிகள் இதில் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் இன்னும் 30000 பவுண்டுகள் கூடிவிடும். ஆனால் இங்கிலாந்து பிரதமருக்கு தரப்படும் மொத்த சம்பளமே 194250 பவுண்டுகள்தான்.
பிபிசியின் டைரக்டர் ஜெனரல் மார்க் தாம்சனுக்கு இதை விட பல மடங்கு அதிக சம்பளம். அவர் பெறுவது 834000 பவுண்டுகள் (அப்படியே 77 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்... எவ்வளவு ரூபாய் என்று தெரிந்துவிடும்!)
இப்படியொரு நிலை தோன்றுவதற்கே பிபிசி செய்த ஒரு செயல்தான் காரணம் என்கிறார்கள்.
தனது ஊழியர்களின் சம்பள விவரங்களை பிபிசியே சமீபத்தில் வெளியிட்டு, அனைத்து மட்டத்தில் வெளிப்படையான தன்மை வேண்டும் என வற்புறுத்தியது. தங்கள் டாப் நிர்வாகிகள் உணவுக்காக செலவிடப்படும் தொகையைக் கூட பிபிசி வெளியிட்டிருந்தது.
இப்போது அதுதான் அந்த நிறுவனத்துக்கே சோதனையாகிவிட்டது. இவ்வளவு சம்பளம் எதற்காக இவர்களுக்குத் தரப்படுகிறது, எதற்காக இவ்வளவு வெட்டி செலவு, இந்த செலவு மக்களின் தலையில்தானே லைசென்ஸ் கட்டணமாக விழுகிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, இப்போது சம்பளக் குறைப்பு அறிவிப்பைச் செய்துள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளுக்குள் படிப்படியாக இந்த சம்பளக் குறைப்பை அமல்படுத்திவிடுவார்களாம் பிபிசி நிறுவனத்தினர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications