Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 ஆண்டுகளுக்குப் பின் பெருவெள்ளம்-கொழும்பில் 3 லட்சம் பேர் தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. 3 லட்சம் பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. எனவே வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழை வெள்ளத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் 12 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனாராம்.

கொழும்பில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் புகுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க எம்.பி.க்கள் கடற்படை படகுகளில் அழைத்து வரப்பட்டனர்.

கொழும்பில் கடந்த 1992-ம் ஆண்டு இது போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது 440 மில்லி மீட்டர் மழை கொட்டியது. ஆனால் நேற்று வியாழக்கிழமை அதையும் மிஞ்சும் வகையில் 493 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+