திமுகவுடன் கூட்டணி கிடையாது-கூட்டணி குறித்து விரைவில் முடிவு-சரத் குமார்
நெல்லை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். ஆனால் திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பாலபாக்யா ஹாலில் நடந்தது. இதற்கு சமக தலைவர் சரத் குமார் தலைமை வகித்தார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நெல்லை மாநகர மாவட்டம், மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசித்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சி நிர்வாகிகள் என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
வரும் தேர்தலில் நிச்சமயாக திமுக-வுடன் கூட்டணி கிடையாது. மற்ற கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் என்னுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
3-வது அணி அமைக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. ஆனால் அவ்வாறு அமைந்தால் வரவேற்பேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமக ஆட்சி அமைக்கும் என்று கூறியதே இல்லை. மக்கள் என்று எங்கள் கட்சி்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களோ அன்று சமக ஆட்சி அமைக்கும்.
வரும் தேர்தலில் நான் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். ஆனால் இன்னும் எந்த தொகுதி என்று முடிவு செய்யவில்லை.
வரும் 18-ம் தேதி சிவகாசியில் நாடார் மகாஜன சங்க கூட்டம் நடக்கிறது. அதில் நான் பேசவிருக்கிறேன். 26-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் அத்திக்கடவு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எனது தலைமையில் இருசக்கர வாகன பேரணி நடக்கிறது.
வருகிற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி தென்காசியில் ச.ம.க. பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications