குரூப் 2 தேர்வு முடிவுகள்: 8 லட்சம் பேரை தவிக்க வைத்த டிஎன்பிஎஸ்ஸி!
சென்னை: ஏற்கெனவே எழுதிய தேர்வுகளுக்கு முடிவுகளை அறிவிக்காமல் தாமதித்து வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையும், இப்போது மீண்டும் குரூப் 2 தேர்வுகளை அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு க்ரூப் 2 தேர்வுகளை நடத்தியது டிஎன்பிஎஸ்ஸி. கிட்டத்தட் 8 லட்சம் பேர் அந்தத் தேர்வை எழுதிவிட்டு, காத்திருக்கின்றனர் முடிவுகளுக்கு.
ஆனால் அதுபற்றி இன்று வரை முறையான ஒரு அறிவிக்கையையும் வெளியிடாத டிஎன்பிஎஸ்ஸி, மீண்டும் 3000 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர் பதவிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் காலி இடங்களை குரூப்-2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
இதனால் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களின் நிலை கேள்விக்குறியதாக உள்ளது. இந்தத் தேர்வுகளுக்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்து எழுதிவிட்டு காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஜூலா, ஆகஸ்ட், அக்டோபர் என மூன்று முறை தேர்வு முடிவுகளை ஒத்திப் போட்ட டிஎன்பிஎஸ்ஸி, டிசம்பரில் மீண்டும் தேர்வு வைப்பதாக கூறியுள்ளது. ஏற்கெனவே எழுதிய தேர்வு முடிவு பற்றி வாயே திறக்கவில்லை.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பது ஒரு சடங்குதான் என்றும், ஏற்கெனவே ஆளும்கட்சியின் பிரமுகர்கள் சிபாரிசுப்படி அவை விற்கப்பட்டுவிட்டதாகவும் அதிமுக, பாமக போன்ற கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. ஒரு பதவிக்கு ரூ 7 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாகவும் இவை கூறியிருந்தன. இதனால் கடந்த மூன்று மாதங்களாகவே, இந்த தேர்வு முடிவுகள் வெளிவராது என்று கூறிவந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்ஸி மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கிராம நிர்வாக அதிகாரிகள் பணிக்காக தேர்வுகளை அறிவித்து விண்ணப்பங்கள் பெற்ற டிஎன்பிஎஸ்ஸி, இன்னும் தேர்வுத் தேதியைக் கூட அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications