கல்லூரி மாணவி கொலை - குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் தயக்கம் - மாதர் சங்தம் குற்றச்சாட்டு
ஊத்தங்கரை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஊத்தங்கரை மாணவி கனகலெட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழக டிஜிபி-யை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை இயக்குநருக்கு மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் உ. வாசுகி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள போத ராஜன்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தனின் மகள் கனகலட்சுமி (21).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள புதுப்பாளையம் இதயா கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கனகலட்சுமி தினமும் பேருந்தில் கல்லூரி சென்று வருவது வழக்கம். கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
மறு நாள் முகம் சிதைக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் மாந்தோப்பில் அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.
முன்னதாக ஊத்தங்கரையைச் சேர்ந்த ஒரு கும்பல், அவர்களது நண்பனைக் கனகலட்சுமி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததாகவும், இல்லை எனில் உயிரோடு விட மாட்டோம் என்று தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் கனகலட்சுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
வழக்கம்போல கொலையுண்ட பெண்ணின் நடத்தை மீது சந்தேகத்தை எழுப்பிக் கொண்டு, மனமுடைந்த பெற்றோர் மற்றும் உறவினரைக் கூடுதல் வேதனைக்கு ஆளாக்கிக் கொண்டுள்ள காவல்துறையின் செயல்பாடு திருப்திகமராக இல்லை.
அரசியல் செல்வாக்கு காரணமாக குற்றவாளிகளைக் கைது செய்ய ஊத்தங்கறை போலீசார் தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கனகலட்சுமியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு தினசரி அழைத்து வந்து விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர்.
எனவே, கொலை செய்யப்பட்ட கனகலட்சுமிக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
-இவ்வாறு அவர் அந்த கடித்தில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications