தேதி அறிவிப்பி்ல் அவசரம் காட்டியது ஏன்?- தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம்

இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:
சட்டசபைத் தேர்தல் கால அட்டவணை குறித்த தேர்தல் ஆணையத்தின அறிவிப்பு அவசர கோலத்தில் வெளியாகியுள்ள ஒன்றாகும். இதுதொடர்பாக தமிழக அரசுடன் தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையயும் நடத்தவில்லை. இந்த அவசர கோல நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்.
அனைவரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏப்ரல் 13ம் தேதி தேர்தலை அறிவித்துள்ளது ஆணையம்.
ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தலை வைத்திருந்தால், அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் பிரசாரத்திற்கு கூடுதல் நாட்கள் கிடைத்திருக்கும்.
மேலும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதிதான் நடைபெறவுள்ளது. மேலும் மே 17ம் தேதிக்குள் புதிய சட்டசபையை அமைக்கும் பணிகளை முடித்தாக வேண்டும்.
மே 14ம் தேதிதான் முழுமையான முடிவுகள் வெளியாகும். அதற்குப் பிறகு 2 நாட்கள் மட்டுமே உள்ளது புதிய சட்டசபையை அமைக்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும். இது மிகவும் குறுகிய கால அவகாசமாகும்.
மேலும், அரசியல் கட்சிகளுக்குப் பிரசாரத்திற்கான கால அளவும் வெறும் 17 நாட்களே கிடைக்கின்றன.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதற்கு நேர் மாறாக உள்ளது. என்ன செய்வது, தேர்தல் ஆணையம் சுயேச்சையான அமைப்பு, யாரிடமும் ஆலோசனை கலக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.
மே 17ம் தேதிதான் புதிய சட்டசபையைக் கூட்ட முடியும் என்கிறபோது, ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை அறிய நான் விரும்புகிறேன்.
எது எப்படி இருப்பினும் திமுக தொண்டர்கள் இன்றே மக்களிடம் செல்ல வேண்டும். தேர்தல் பணிகளை தொடங்கிட வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications