தேதி அறிவிப்பி்ல் அவசரம் காட்டியது ஏன்?- தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம்

இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:
சட்டசபைத் தேர்தல் கால அட்டவணை குறித்த தேர்தல் ஆணையத்தின அறிவிப்பு அவசர கோலத்தில் வெளியாகியுள்ள ஒன்றாகும். இதுதொடர்பாக தமிழக அரசுடன் தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையயும் நடத்தவில்லை. இந்த அவசர கோல நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்.
அனைவரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏப்ரல் 13ம் தேதி தேர்தலை அறிவித்துள்ளது ஆணையம்.
ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தலை வைத்திருந்தால், அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் பிரசாரத்திற்கு கூடுதல் நாட்கள் கிடைத்திருக்கும்.
மேலும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதிதான் நடைபெறவுள்ளது. மேலும் மே 17ம் தேதிக்குள் புதிய சட்டசபையை அமைக்கும் பணிகளை முடித்தாக வேண்டும்.
மே 14ம் தேதிதான் முழுமையான முடிவுகள் வெளியாகும். அதற்குப் பிறகு 2 நாட்கள் மட்டுமே உள்ளது புதிய சட்டசபையை அமைக்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும். இது மிகவும் குறுகிய கால அவகாசமாகும்.
மேலும், அரசியல் கட்சிகளுக்குப் பிரசாரத்திற்கான கால அளவும் வெறும் 17 நாட்களே கிடைக்கின்றன.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதற்கு நேர் மாறாக உள்ளது. என்ன செய்வது, தேர்தல் ஆணையம் சுயேச்சையான அமைப்பு, யாரிடமும் ஆலோசனை கலக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.
மே 17ம் தேதிதான் புதிய சட்டசபையைக் கூட்ட முடியும் என்கிறபோது, ஏப்ரல் 13ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை அறிய நான் விரும்புகிறேன்.
எது எப்படி இருப்பினும் திமுக தொண்டர்கள் இன்றே மக்களிடம் செல்ல வேண்டும். தேர்தல் பணிகளை தொடங்கிட வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications