போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

Supreme Court
டெல்லி: போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி சிபிஐ இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தாமதமாக மறு விசாரணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இதற்கு என்ன காரணம் என்பதை சிபிஐயும், மத்தியப் பிரதேச அரசும் தெளிவாக விளக்கவில்லை.

முன்பே அவர்கள் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த தாமதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவின் மூலம் போபால் விஷ வாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக அளவிலான நிவாரண நிதி கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது.

1984ம் ஆண்டு போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய விஷ வாயுவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்போடு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்.

மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடையும் தரவில்லைய யூனியன் கார்பைடு. இந்த நிலையில் இவ்வழக்கில் 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதில் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீதான கடுமையான குற்றச்சாட்டை நீக்கியது உச்சநீதிமன்றம்.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத்தான் இப்போது சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டி, இத்தனை காலம் சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்று காட்டமாக கேட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போபால் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், மிக மிக குறைந்த அளவிலான தண்டனை தரப்பட்டது. இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை விட கொடுமையாக தண்டனை விதிக்கப்பட்ட அத்தனை பேரும் உடனடியாக ஜாமீனிலும் வெளியாகி விட்டனர்.

தற்போது உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள (அதாவது 2 ஆண்டு சிறை) அத்தனை பேரும் இந்த காலத்தை முடித்து விட்டு வெளியாகி விடும வாய்ப்பு உருவாகி விட்டது. மேலும் யூனியன் கார்பைடு ஆலையின் தவறால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மேல் நிவாரணம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டு விட்டது.

போபால் வழக்கில், மகிந்திரா, விஜய் கோகலே, கிஷோர் காம்தார், முகுந்த், செளத்ரி, கே.வி.ஷெட்டி, குரேஷி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+