பொட்டு சுரேஷ் வழக்கு: அதிமுக-திமுக வழக்கறிஞர்கள் மோதல், வெளியேறிய நீதிபதி
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமான பொட்டு சுரேஷ் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை 7 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மதுரை ஜே-1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக பொட்டு சுரேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கியதும் நால்வரையும் வேக வேகமாக போலீசார் உள்ளே இழுத்துச் சென்றனர்.
இதையடுத்து திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கூச்சலிட்டனர். பதிலுக்கு அதிமுக வழக்கறிஞர்கள் குரல் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் தள்ளுமுள்ளு செய்ததோடு, கைகலைப்பிலும் ஈடுபட்டனர்.
இதனால் கடுப்பான நீதிபதி, கோர்ட் வளாகத்தை விட்டு வெளியேறினார்.












Click it and Unblock the Notifications