ஊழல் புற்று நோயை ஒழித்திட வேண்டும்: சுதந்திரதின உரையில் பிரதீபா பாட்டீல் பேச்சு

சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையை ஊழல் இன்று ஒரு புற்றுநோயைப்போல் பாதித்து வருகிறது. இதை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
ஒரே மருந்தில் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியாது என்பது போல், ஒரே வழிமுறையில் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக தடுப்பு, தண்டனை, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாடு நிதானமான விவேகமான அறிவுடன் சிந்திக்கும் திறன் கொண்டது என்று போற்றப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல், அதீத செயல்களை தவிர்க்க வேண்டும்.
நாடாளுமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மை, அவற்றின் செயல்முறைகளின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் வரைமுறைக்கு உட்பட்டு அமைந்துள்ளது. தேவைப்படும்போது சரியான நடவடிக்கை மூலம் அவற்றுக்கு திறமையும், வலிமையும் சேர்க்க வேண்டும். இதில் தொடர் முயற்சி மேற்கொள்ளாவிட்டால் அவற்றின் நம்பகத்தன்மை அழிந்துவிடும்.
நமது நாடாளுமன்றத்தில் சாதனைக்குரிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் சுமூகமாக விவாதங்கள் நடைபெற வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை தீர்க்க நமது இளம் தலைமுறை எம்.பி.க்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியது.
இது போன்ற பிரச்சனைகளை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். தூய்மையான ஆட்சி முறை, சுகாதாரமான செயல்பாடு ஆகியவற்றை அதிகரிக்க, தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதுபோல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நம்பி இருக்கும் விவசாயத்தில் நாம் அதன் முழு உற்பத்தி திறனை எட்டாமல் இருக்கிறோம். விவசாயத்தில் ஒரு புரட்சி ஏற்பட ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் இதில் முன்னணி பங்கு வகிக்க வேண்டும். மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் குறைந்து வருவதற்கு காரணமான சமூக பாரபட்சங்களுக்கு எதிராக போராட வேண்டும். வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளை விரட்டுவதற்கு போராட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நன்னாளில், அனைத்து குடிமக்களும் முழு அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும், பெருமையுடனும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications