தைவானில் கடலில் மூழ்கியது சரக்கு கப்பல்: 6 பேர் பலி, 4 பேர் மாயம்
தைபே (தாய்வான்): பனாமா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியதில், 6 பேர் பலியாகினர். மேலும் 4 பேரை காணவில்லை.
பனாமா நாட்டை சேர்ந்த ஜூவய் சிங் என்ற சரக்கு கப்பல், 21 கப்பல் பணியாளர்களுடன் சென்றது. தைவான் நாட்டிலுள்ள கீலூங் துறைமுகத்தில் இருந்து 11,500 டன் சரக்குகளுடன் கடலில் சென்றது. அடுத்த 90வது நிமிடத்தில் கடலில் வீசிய புயலில் சிக்கி, கப்பல் அப்பகுதியில் இருந்த பாறையில் மோதி 2 துண்டாக பிளந்து கடலில் மூழ்கியது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பலியாகினர். 11 பேர் காப்பற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன 4 பேரை, மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதில் 3 கப்பல் பணியாளர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 315.5 டன் கச்ச எண்ணெய், கடலில் கலந்துள்ளதால், மீட்புப் பணிகளில் துரிதமாக செயல்பட முடியவில்லை. மேலும் கடல்நீர் கடுமையாக மாசுப்பட்டுள்ளது. கடலில் எண்ணெய் பரவலை தடுக்க, எண்ணெய் உள்வாங்கி அட்டைகள் (அப்சர்வன்ட் சீட்) ஆங்காங்கே மிதக்க விடப்பட்டுள்ளன. மேலும் எண்ணெய் கசிவை கண்டுபிடிக்க ரேடார் மூலம் கண்டுபிடிப்பு கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications