தைவானில் கடலில் மூழ்கியது சரக்கு கப்பல்: 6 பேர் பலி, 4 பேர் மாயம்
தைபே (தாய்வான்): பனாமா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியதில், 6 பேர் பலியாகினர். மேலும் 4 பேரை காணவில்லை.
பனாமா நாட்டை சேர்ந்த ஜூவய் சிங் என்ற சரக்கு கப்பல், 21 கப்பல் பணியாளர்களுடன் சென்றது. தைவான் நாட்டிலுள்ள கீலூங் துறைமுகத்தில் இருந்து 11,500 டன் சரக்குகளுடன் கடலில் சென்றது. அடுத்த 90வது நிமிடத்தில் கடலில் வீசிய புயலில் சிக்கி, கப்பல் அப்பகுதியில் இருந்த பாறையில் மோதி 2 துண்டாக பிளந்து கடலில் மூழ்கியது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பலியாகினர். 11 பேர் காப்பற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன 4 பேரை, மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதில் 3 கப்பல் பணியாளர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 315.5 டன் கச்ச எண்ணெய், கடலில் கலந்துள்ளதால், மீட்புப் பணிகளில் துரிதமாக செயல்பட முடியவில்லை. மேலும் கடல்நீர் கடுமையாக மாசுப்பட்டுள்ளது. கடலில் எண்ணெய் பரவலை தடுக்க, எண்ணெய் உள்வாங்கி அட்டைகள் (அப்சர்வன்ட் சீட்) ஆங்காங்கே மிதக்க விடப்பட்டுள்ளன. மேலும் எண்ணெய் கசிவை கண்டுபிடிக்க ரேடார் மூலம் கண்டுபிடிப்பு கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications