நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல்- கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதி்வானது. இந்த நில அதிர்வால் இடுக்கி மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விரிசல் வழியாக தண்ணீர் அதிகளவு கசிவதாகவும் கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கேரள நீர்பாசன துறை நிர்வாகப் பொறியாளர் டோமி ஜார்ஜ் தலைமையிலான அதிகாரிகள் அணைக்கு சென்று சோதனை நடத்தினர்.
பின்னர் டோமி ஜார்ஜ் அளித்த பேட்டியில் கூறுகையில், நில அதிர்வால் அணையில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இருந்தாலும் இது குறித்து தீவர ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.
நேற்று கேரள நில அளவியல் துறை அதிகாரிகளும் அணையில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் கொச்சியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அளித்த பேட்டியில் கூறியதாவது,
முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வால் புதிதாக ஏற்பட்ட விரிசலில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது. அதே நேரம் இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை.
அணையின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதற்காக வருவாய் துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு அணை பகுதிக்கு நாளை சென்று பார்வையிட உள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications