திருப்பதி ஏழுமலையானை மிஞ்சிய திருவனந்தபுரம் பத்மநாபன்!
திருப்பதி கோவிலுக்கே பெரும் சவாலாக கிளம்பியது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில். அக்கோவிலில் பதுங்கிக்கிடக்கும் பல லட்சம் கோடி பொக்கிஷம் குறித்த தகவல் வெளியாகி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருவனந்தபுரத்தில் படு அமைதியாக காட்சி தரும் பத்மநாபசாமி கோவில் மீது கடந்த ஜூன் மாதத்திற்கு முன்பு வெளிச்சப் புள்ளி ஏதும் படாமலேயே இருந்து வந்தது. ஆனால் அங���குள்ள கோவிலில் உள்ள பாதாள ரகசிய அறைகளைத் திறந்து அதில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்யுமாறு ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாதத்தி்ல 27ம்தேதி பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு கோவிலின் ரேஞ்சே மாறிப் போய் விட்டது.
ஒவ்வொரு அறையாகத் திறக்கத் திறக்க மக்களுக்கு மூர்ச்சை வராத குறையாக வியப்பு மேலோங்கிப்போனது. காரணம், அந்த அளவுக்கு அங்கு குவ���ந்து கிடந்த வைடூரியம், வைரம், தங்கம், வெள்ளி நகைகளின் மலைக் குவியல்தான். பல லட்சம் கோடி அளவிலான நகைப் பொக்கிஷம் அந்த பாதாள அறைகளில் பதுங்கியிருந்த ரகசியம் அம்பலமானபோது அனைவருமே வியந்து போயினர்.
திருப்பதி கோவிலின் சொத்துக்களை விட இங்கு கிடைத்துள்ள நகைகளின் மதிப்பு அதிகம் என்ற தகவலும் அனைவரையும் வியப்படைய வைத்தது.
தற்போது நகைககளின் உண்மையான மதிப்பு குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் வரலாறு காணாத மதிப்பு மிக்க பொக்கிஷம் இக்கோவிலில் உள்ளது மட்டும் உண்மை. இத்தனைக்கும் அங்குள்ள 6வது ரகசிய அறை இதுவரை திறக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, திருப்பதி ஏழுமலையானை, திருவனந்தபுரம் பத்மநாபசாமி மிஞ்சிய ஆண்டு.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications