சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு நானே பொறுப்பேற்கிறேன்-டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு:1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும், அதில் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளார் இலங்கையில் அமைச்சராக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா.
முன்பு போராளியாக இருந்தவர் இந்த டக்ளஸ். இபிஆர்எல்எப் எனப்படும் ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவராக இருந்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்தார் டக்ளஸ்.
அப்போது 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை சூளைமேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகள் 9 பேரும் கைதானார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பிறகு டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 1988-ம் ஆண்டு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணக்கார வீட்டு சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று டக்ளஸ் பல லட்சம் ரூபாய் பறிக்க முயன்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டதோடு டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தனர்.
சென்னை போலீசில் டக்ளஸ் மீது மீண்டும் வழக்கு பதிவானது. இதற்கிடையே டக்ளஸ் கொலை முயற்சி ஒன்றிலும் ஈடுபட்டார். இப்படி, கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் பறித்தல் என தொடர்ந்து டக்ளஸ் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார். அங்கு போய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஆள் காட்டியாக சிங்களர்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார். அதன் பயனாகத்தான் தற்போது அமைச்சர் பதவியைப் பிச்சை போட்டுள்ளார் ராஜபக்சே.
தற்போதும் சென்னை காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் உயிருடனேயே வைக்கப்பட்டுள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாகவும அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை பக்கமே திரும்பிப் பார்க்காமல் இலங்கையிலேயே பதுங்கியிருக்கிறார் டக்ளஸ்.
இந்த நிலையில் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டை நடத்தியது இ.பி.ஆர்.எல்.எல்.பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதற்கு நான் தான் பொறுப்பாகும்.
சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ள அந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்த பழைய விவகாரத்தை சிலர் அரசியல் லாபத்துக்காக மீண்டும் கிளப் பியுள்ளனர் என்று திடீர் ஞானோதயம் வந்தவர் போல பேசியுள்ளார் டக்ளஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications