வோடபோன் வழக்கு - மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வோடபோன் என்ற பெயரில் இந்தியாவில் தொலைத் தொடர்பு வர்த்தகம் செய்யும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஹட்சிசன்-எஸ்ஸார் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை 11.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.56 ஆயிரம் கோடி) கொடுத்து, வோடபோன் நிறுவனம் கையகப்படுத்தியது. 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் நடந்த இந்த வர்த்தக பேரத்துக்கு வருமான வரித்துறை வரி விதித்தது.
இதை எதிர்த்து வோடபோன், மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியது. அங்கு வருமான வரித்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. உடனடியாக ஹட்சிசன் நிறுவனம் வரியை செலுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியதால் அதை எதிர்த்து வோடபோன் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தும், வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துடன் நடந்த வர்த்தக பேரத்தில் ரூ.11 ஆயிரம் கோடி வருமான வரி விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பேரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமே வெளிநாட்டில் உள்ளது. ஆனால் வாங்கிய நிறுவனம் இந்தியாவில் வரத்தகம் செய்கிறது. எனவே ஹட்சிசன் நிறுவனம் வரி செலுத்தியாக வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
அதை தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து, மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications