18 நாளக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம்...கரூரில் கொந்தளித்த மக்கள்
கரூர்: கரூர் பசுபதிபாளையத்தில் 18 நாளைக்கு ஒரு முறை குடி நீர் வினியோகம் செய்வதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பசுபதிபாளையத்தில் உள்ள 30, 31, 32 வது வார்டுகளில் உள்ள நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராமானூரில் உள்ள மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது வடக்கு காந்தி கிராமம் பகுதிகளுக்கும் ராமானூர் மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், கடந்த சில தினங்களாக 18 நாள் முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த நிலையில், அந்த குடிநீரும் சரியாக வருவது இல்லை என கூறி அப் பகுதியைச் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பசுபதிபாளையம் காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து, அங்கு, கரூர் தாசில்தார் பாலசுப்ரமணியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ரவி ஆகியோர் வந்து, பொது மக்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications