செத்துப் போன தூக்குத் தண்டனை கைதிக்கு கருணை காட்டிய பிரதீபா பாட்டீல்!!!

இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம் ஆண்டு பகல்கோட்டில் உள்ள ஜூலியால் தாலுகாவில் குடியேறி, சதாசிவ அப்பண்ணா மடத்தில் தங்கியிருந்தார். அவர் மடத்தின் அருகிலுள்ள பள்ளிக் கூடத்திலிருந்து 16 வயது சிறுமியை கடத்தி வந்து மடத்தில் வைத்து கற்பழித்து, கொலை செய்து விட்டு தலைமறைவானார். நான்கு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் கொடுத்த தகவலின்படி சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஷீரடியில் வைத்து பாபுராவை போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் பாபுராவுக்கு 2005ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தபோது உயர் நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாபுராவ் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். கடந்த ஜூன் 20ம் தேதி, குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கருணை மனு வந்தபோது பாபுராவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அவர் கையெழுத்திட்டார்.
ஆனால் பாபுராவ் பெல்காம் சிறையில் இருந்தபோது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு 2007ல் தனது 31வது வயதில் இறந்துவிட்டார். இந்த தகவலை குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகத்துக்கு முறைப்படி கர்நாடக சிறை அதிகாரிகளோ, உள்துறை அலுவலகமோ தெரிவிக்கவில்லை. அதனால் கவனக்குறைவு காரணமாக நடந்த சம்பவம், பிரதீபா பாட்டீலின் முடிவு விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications