ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவான் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்
மும்பை: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்பட 13 பேர் மீது சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அவர் எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனைகளை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒதுக்கிக் கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆதர்ஷ் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் தான் அசோக் சவான் மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதியே சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அசோக் சவான் உள்பட 13 பேர் மீது சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை 10,000 பக்கங்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 9 பேர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் ஆனதால் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து அசோக் சவான் உள்ளிட்டோர் எந்நேரத்திலும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications