ஒரே இடத்தில் 5 ஆண்டு தங்கி ரசீது வைத்திருந்தால் உடனே பட்டா
தூத்துக்குடி: ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்து அதற்கான ஆதாரமாக வீட்டு ரசீது, மின் இணைப்பு ரசீது வைத்திருந்தால் அவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் ஜதிந்திரநாத் ஸ்வைன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா மாறுதல்கள், அரசு நிலங்கள் குத்தகை, அரசின் நிலுவையில் உள்ள பட்டா சம்பந்தமான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசின் முதன்மை செயலாளரும், நில நிர்வாக ஆணையருமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜதிந்திரநாத் ஸ்வைன் தூத்துக்குடி வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பட்டா மாற்றம் எந்த அளவிற்கு வழங்கப்படுகிறது. ஜமாபந்தி காலத்தில் எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டா மாற்றத்தை கால தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இலவச வீட்டுமனை பட்டாவை பொறுத்தமட்டில் நகர்புறம், கிராமப் புறங்களில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் இருந்தும், வீட்டுத் தீர்வை, மின் இணைப்பு போன்ற ஆவணங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு உடனுக்குடன் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். ஆலோசனைக்கு பின்னர் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று மக்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டிருந்த பட்டாக்களை பார்வையிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications