இலங்கை வரதராஜ பெருமாளால் பெரும் தொல்லை. வேற இடத்தில் குடியமர்க்க கோரும் டெல்லிவாசிகள்

இலங்கையில் 1988-90களில் இந்திய அமைதிப் படை நிலைகொண்டிருந்தது. அப்போது இந்திய அமைதிப் படையின் பாதுகாப்புடன் இலங்கையின் வடகிழக்கு மாகாண சபையின் தலைவராக வரதராஜ பெருமாளை நியமித்து 'பொம்மை அரசாங்கத்தை' அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி நடத்தினார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இந்திய அமைதிப் படையின் போரைத் தொடர்ந்து வரதராஜ பெருமாளின் பொம்மை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் இந்திய அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறியபோது வரதராஜ பெருமாளும் நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் வரதராஜ பெருமாள் உயிருக்கு ஆபத்து என்று கூறி அவரது இருப்பிடத்தை மிகவும் ரகசியமாக வைத்து வந்தது இந்திய அரசு. இந்தியாவில் ராஜஸ்தானில் வசிக்கிறார்... ஒடிஷா காடுகளில் வசிக்கிறார்... வடகிழக்கு மாகாணத்தில் வசிக்கிறார்.. என்றுதான் வரதராஜ பெருமாள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டு வந்தன.
ஆனால் இந்திய ரா மற்றும் ஐபியின் நேரடி பாதுகாப்பின் கீழ் இத்தனை ஆண்டுகாலமும் தலைநகர் டெல்லியில்தான் வரதராஜ பெருமாள் வசித்து வந்திருக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது- ஒரு பொதுநலன் வழக்கு மூலம்!
டெல்லி சர்வோதயா என்கிளேவ் என்ற குடியிருப்பில் வசித்து வருவோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
அம்மனுவில், வரதராஜ பெருமாளுக்கு டெல்லி போலீசின் 25 பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த பாதுகாவலர்கள் சர்வோதயா என்கிளேவ் குடியிருப்புக்கு முன்பாக உள்ள டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை ஆக்கிரமித்து கூடாரம் அமைத்துள்ளதுடன் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்தவும் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் வரதராஜ பெருமாளை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications