கருணாநிதியின் பிறந்தநாள் போஸ்டரில் அதிமுக நிர்வாகி பெயர்: வழக்கு தொடர முடிவு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா போஸ்டரில் தமது பெயரை போட்டது குறித்து வழக்கு தொடரப் போவதாக திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற மிசா சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுகவில் 45 ஆண்டுகளாக இருந்தவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி. கடந்த 1976ம் ஆண்டு மிசா சட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக கைதாகி வேலூர் சிறையில் ஒரு ஆண்டு காலம் இருந்ததால் அவர் மிசா சுந்தரமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் பகுதியில் போட்டியிட மிசா சுந்தரமூர்த்தி சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மிசா சுந்தரமூர்த்தியின் மகன் ஜெயசங்கரன் திமுக தலைமையிடத்தில் டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் கொடுக்க கட்சி மறுத்தது. இதையடுத்து அவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு தந்தையும், மகனும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழா கூடுவாஞ்சேரியில் நடக்கிறது. இதற்காக திமுகவினர் அடித்துள்ள போஸ்டர்களில் மிசா சுந்தரமூர்த்தியின் பெயர் உள்ளது. இதைப் பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் போஸ்டரில் எனது பெயரைப் போட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை களங்கப்படுத்த திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளனர். உடனே போஸ்டரில் இருந்து எனது பெயரை நீக்கிவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications