மக்களின் ஒற்றுமைக்கு பாடுபடுவோம்: ஜெயலலிதா தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்பட பாடுபடுவோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை கோட்டையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 18ம் தேதி நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நல்லிணக்க நாள், நேற்று சென்னை கோட்டையில் உள்ள ராணுவ மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனுசரிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் தலைமையில் அரசு ஊழியர்கள் அணிவகுத்த நின்று நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழி வாசகத்தை முதல்வர் ஜெயலலிதா வாசிக்க, அரசு ஊழியர்கள் அனைவரும் திரும்ப கூறினர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழியில் கூறியதாவது,
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்து கொள்கிறேன்.
மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியல் அமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்றனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்










Click it and Unblock the Notifications