மின் தடையை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
நெல்லை: பாவூர்சத்திரம் பகுதியில் மின் தடையை கண்டித்து கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 10 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சாரம் எப்பொழுது வரும், போகும் என்றே தெரியாமல் மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்து பாவூர்சத்திரம், கீழப்பாவூர், அடைக்கலப்பட்டணம், மகிழ்வண்ணநாதபுரம், ஆவுடையானூர், சிவநாடானூர், மடத்தூர் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் "மின்சாரத்திற்கு கண்ணீர் அஞ்சலி" என்ற தலைப்பில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை பொதுமக்கள் ரசித்து படித்து வருகின்றனர்.
அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது,
கண்ணீர் அஞ்சலி. அகால மரணமடைந்த மின்சாரம், தோற்றம் 6 மணிநேரம், மறைவு 18 மணிநேரம், எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த மின்சாரம் மரணமடைந்ததால் வருந்துகிறோம். பச்சிளம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், பீடி சுற்றும் பெண்கள், விவசாயிகள் மற்றும் இதர தொழிலாளர்கள் அனைத்து பகுதி மக்கள் வருத்ததுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் மகிழ்வண்ணநாதபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications