நகை, புடவை பற்றி மட்டும் விசாரிக்காதீங்க, தொகுதி பற்றியும் விசாரியுங்கள்..பெண்களுக்கு அய்யர் அட்வைஸ்
சென்னை: பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நகை, புடவை பற்றி மட்டும் பேசக் கூடாது. மாறாக அவர்கள் சார்ந்த தொகுதி எப்படி உள்ளது, அதன் நிலவரம் என்ன என்பது குறித்தும் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவின்போது அவர் பேசுகையில், ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி, 1ம் தேதியை அடிப்படை நாளாகக் கருதி, புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தும் பணிகள் நடக்கிறது. ஆனால், வாக்காளராக சேரவில்லை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை போன்ற குறைகளை, பொதுமக்கள் சொல்லிக் கொண்டே உள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.
திருமண விழா, குடும்ப விழா, பொது விழாக்களில் பிறரை சந்திக்கும்போது, நகை, புடவை நன்றாக உள்ளது. எந்த கடையில் வாங்கினீர்கள்? என, பெண்கள் விசாரிக்கின்றனர்.இதோடு சேர்த்து, எந்த தொகுதியில் வாக்காளராக உள்ளீர்கள்? வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளீர்களா?' என விசாரிப்பதையும், வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் விழிப்பாகவும், நேர்மையாகவும் இருந்தால் தான், நேர்மையான பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடியும். கையூட்டு பெற்று ஓட்டளித்தால், நேர்மையற்ற பிரதிநிதிகளைத் தான் தேர்வு செய்யமுடியும். நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு, பிரதிநிதிகளை குறை சொல்வதில் பயனில்லை.
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல், சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுகளில், 11 சட்டசபை தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
பெண்கள் சரியான முடிவை, நேர்மையான முடிவுகளை எடுப்பவர்கள். எனவே, பெண் வாக்காளர்கள் அதிகரித்து உள்ளது, சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications