வேலைக்காரப் பெண் தலை துண்டிப்பு.. இலங்கையிலிருந்து தூதரை திரும்பப் பெற்ற சவூதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு/ரியாத்: சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த வேலைக்காரப் பெண் தலை துண்டித்து மரண தணட்னை நிறைவேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த இலங்கை தனது தூதரை சவூதியிலிருந்து திரும்பப் பெற்றது. இதற்குப் பதிலடியாக சவூதியும் தனது இலங்கை தூதரை வாபஸ் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் சிக்கிய இலங்கைப் பெண், சவூதி அரேபியாவில் தலை துண்டித்து மரண தண்டனை விதிக்கப்பட்டார்.இதனால் கோபமடைந்த இலங்கை தனது சவூதி தூதரை திரும்பப் பெற்றது.
இதையடுத்து தற்போது இலங்கைக்கான தனது நாட்டுத் தூதரை சவூதி அரேபியா திரும்பப் பெற்றுள்ளது.
இலங்கையில் இருந்து வந்த சவூதி தூதர் அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் ஜமாஸ் கொழும்பிலிருந்து கிளம்பிச் சென்று விட்டதாக சவூதி அரேபிய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications