பாலச்சந்திரன் பற்றிய புகைப் படங்கள்- கோத்தபாய ராஜபக்சே நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil

பாலச்சந்திரன் கைதும் அதன் பின்னரான படுகொலை படமும் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்சே, இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள "நோ பயர் சோன்" புகைப்படங்கள் நம்பக் கூடியவை அல்ல.
பாலச்சந்திரன் பற்றிய புகைப்படங்களில் இராணுவ அடையாளங்களே இல்லை. ஆனால் அனைவரும் இராணுவத்தின் பதுங்கு குழியில் இருக்கிறார் எனக் கூறுகின்றனர். புகைப்படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருக்கின்றனர்.
இறுதி யுத்த காலத்தில் எடுத்ததாகக் கூறப்படும் இந்த படங்களை எடுத்தவர் யார்? இதுபற்றி பேசுவோர் சிறார் போராளிகளைப் பற்றி பேசுவதில்லையே என்றார்.












Click it and Unblock the Notifications