இனி யாருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கக் கூடாது - யாஹூ சிஇஓ அதிரடி உத்தரவு

கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கிறது யாஹூ. கூகுள் விஸ்வரூபத்தின் எதிரொலியாக இன்று யாஹூவைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்து, யாஹூவை தூக்கி நிறுத்தும் பணியில் மரிசா மேயர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பணியில் அமர்ந்ததும், ஒவ்வொரு யாஹூ ஊழியருக்கும் இலவச உணவு, புத்தம் புதிய ஸ்மார்ட் போன்கள் வழங்க உத்தரவிட்டார் மேயர். ஊழியர்களைத் தட்டிக் கொடுத்த கையோடு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் முடுக்கி விட்டார். தற்போது ஊழியர்கள் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையிலான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதாவது யாஹூ ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒர்க்கிங் பிரம் ஹோம், அதாவது வீட்டிலிருந்து பணியாற்றுவது என்ற சலுகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் மேயர்.
இனிமேல் யாரும் வீட்டிலிருந்து பணியாற்றக் கூடாது. அனைவரும் அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று யாஹூ நிறுவனத்தின் மனித வளப் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.
ஊழியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வேலை செய்தால்தான் அவர்களுக்குள் நட்புறவு, தோழமையுணர்வு, புரிந்து கொண்டு செயல்படுதல், விட்டுக் கொடுத்தல் உள்ளிட்டவை ஏற்படும். இது வேலைக்கும் நல்லது, ஊழியர்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பது மேயரின் கருத்தாகும்.
வீட்டிலிருந்து வேலை பார்ப்பது என்பது பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குத் தரும் ஒரு சலுகையாகும். ஆனால் இதை தற்போது பல நிறுவனங்கள் ரத்து செய்ய ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் பல நிறுவனங்களில் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது யாஹூவும் இதைக் கையில் எடுத்திருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications