'என் வீட்டுக்காரர் கடிக்கிறார்.. இல்லை, இல்லை என் மனைவிதான் கடிக்கிறா''
சென்னை: செக்ஸ் உறவின்போது தனது கணவர் வெறித்தனமாக கடிக்கிறார் என்று ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கணவரிடம் போலீஸார் விசாரித்தபோது, இல்லை என் மனைவிதான் என்னை கடிப்பா என்று கணவர் கூறவே இந்தப் புகாரை எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் போலீஸார் குழம்பிப் போய் விட்டனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பரிமளா என்ற இளம் பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். எனது கணவர் பெயர் தயாளன். 30 வயதாகிறது. மும்பையில் கார் வாங்கி விற்கும் தொழில் நடத்தி வருகிறார். பட்டதாரி.
எனக்கும், எனது கணவருக்கும் சமீபத்தில்தான் திருமணமானது. முதல் நாள் இரவே எனது கணவர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். செக்ஸ் உறவின்போது என்னை பலமாக பல இடங்களிலும் கடித்தார். கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெறி கொண்டு கடித்தார்.
முதல் இரவு என்பதால் வெறியுடன் நடந்து கொண்டதாக நினைத்து விட்டு விட்டேன். ஆனால் எப்போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொண்டோமோ அப்போதெல்லாம் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார். இதனால் எனக்கு பயமாக இருக்கிறது. அவரது கடியைத் தாங்க முடியவில்லை.
இப்படிப்பட்டவருடன் போய் மும்பையில் வாழவும் தயக்கமாக இருக்கிறது. என்னை கடித்துக் கொடுமைப்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து தயாளனை வரவழைத்து விசாரித்தனர் போலீஸார். அப்போது அவர், நான் கடிப்பதில்லை, என் மனைவிதான் என்னை கடிப்பா என்று சொன்னாராம். இதனால் குழம்பிப் போய் விட்டனர் போலீஸார். இருப்பினும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாளன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் தயாளனையும் கைது செய்தனர்.