திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்… பல்லாயிரக்கணக்கனோர் தரிசனம்
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரவிழா 26-ந்தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 27-ந்தேதி சூரசம்ஹாரமும், 28-ந்தேதி பட்டாபிஷேகமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை முருகன்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண மதுரையில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சமேதராக கலந்து கொண்டார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கோவில் வாசல் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வைரத்தேருக்கு சுவாமி எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர்.
கிரிவலப்பாதையில் வலம் வந்த தேர் பகல் 11 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வந்திருந்தனர். இதனையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications