புல்லர் மனு தள்ளுபடி: ஜனாதிபதியிடம் மீண்டும் முறையிடுவோம்: அகாலி தள்
சண்டிகர்: கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதால் மட்டுமே புல்லரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் பஞ்சாபின் ஆளும் அகாலிதள் கட்சி மற்றும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆகியவை அதிர்ச்சியடையந்துள்ளன.
1993ஆம் ஆண்டு டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். அவரது மனு தள்ளுபடியானது. குடியரசுத் தலைவருக்கும் கருணை மனு அனுப்பினார். ஆனால் 2003ஆம் ஆண்டு அவர் அனுப்பிய கருணை மனுவை 2011ஆம் ஆண்டு 8 ஆண்டு கால தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்தார். தமது மனுவவை 8 ஆண்டுகால தாமதமாக நிராகரித்ததால் தமது தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் புல்லர் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குடியரசுத் தலைவர் காலதாமதமாக நிராகரித்தார் என்பதாலேயே தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று கூறி புல்லரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த அகாலி தளத் தலைவர் பிரேம்சிங் சந்த்முஜ்ரா, இது எதிர்பாராத ஒரு தீர்ப்பு. பஞ்சாப் மாநிலத்தின் அப்போதைய சூழ்நிலையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். புல்லரை தூக்கிலிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம். இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
புல்லரின் மனு தள்ளுபடி தொடர்பாக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் சிங் பஜ்வா, நாட்டின் மிக உயரிய நீதிமன்ற அமைப்பு அளித்திருக்கும் தீர்ப்பு இது. நாம் மதிப்பளிக்க வேண்டும். இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications