மாணவர் காங். தலைவர் தேர்தலில் வென்ற ஜி.கே.வாசன் ஆதரவாளர்: முடிவு அறிவிப்பது நிறுத்திவைப்பு!

சமீபத்தில் தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. முல்லா கான் என்பவர் தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தேர்தலில் 17 மாவட்டங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். 12 மாவட்டங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்-
அவரது மகன் கார்த்தி ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
மாநில தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி.கே.வாசன் ஆதரவாளரான கலையரசனும், ப.சிதம்பரம் ஆதரவாளரான ராமநாதனும் போட்டியிட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் ஜி.கே.வாசன் ஆதரவாளரான கலையரசன் சுமார் 800 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.
இந் நிலையில் கலையரசனின் கல்வி சான்றிதழ் போலியானது என்று திடீரென புகார் கூறப்பட்டது. இதனால் தேர்தல் முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக இது தொடர்பாக தேர்தல் அதிகாரி முல்லா கான் விசாரணை நடத்தினார். இன்று அவர் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து சிறப்பு பிரதிநிதி ஒருவரை கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அனுப்பி வைக்கவுள்ளார்.
இவர் கலையரசனின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னரே முடிவு அறிவிக்கப்படுமாம்.
ஏற்கனவே ராகுல் காந்தி- ஜி.கே.வாசன் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர் அதிக வாக்குகள் பெற்றும் கூட மாநிலத் தலைவராவதில் சிக்கல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மாவட்டத் தலைவர்களாக வெற்றி பெற்ற தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications