குறுவை சாகுபடிக்கு வைகை அணை தண்ணீர் திறப்பு! ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு பங்கேற்பு
தேனி: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கான நீர்ஆதாரமாக வைகை அணை திகழ்ந்து வருகின்றது.
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

பெரியாறு - வைகை அணை இருபோக சாகுபடி நிலங்களில் முதற்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விவசாயகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலிலதா உத்தரவிட்டார்.
இதன்படி, வைகை அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிதிஅமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.

இதன் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தைச் சேர்ந்த 29501 ஏக்கர் நிலமும், வாடிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 13747 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 1793 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 45041 பதிவு பெற்ற பெரியாறு இருபோக சாகுபடி நிலங்கள் பயன்பெறும் என கூறப்படுகின்றது.
மேலும், இன்றுமுதல் விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி நீர் வீதம் 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தென் மாவட்ட விவசாயிகள் ஆறுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications