கிடைத்த தகவலை சொன்னேன்..: ராஜ்யசபாவில் ஆண்டனி விளக்கம்! பிரதமருடன் ஆலோசனை!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானது தொடர்பான தமக்கு கிடைத்த தகவலையே நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன் என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் என்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நேற்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தெரிவித்தார். ஆனால் முன்னதாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கின. முன்னதாக காலையில் ஏ.கே. ஆண்டனி சபைக்கு வரவில்லை. பின்னர் பகலில் சபைக்கு வந்த போது இதே பிரச்சனையை எம்.பிக்கள் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவர், எனக்குக் கிடைத்த தகவலை இந்த சபைக்குத் தெரிவித்தேன். தற்போது ராணுவ தலைமை தளபதி நிகழ்விடத்துக்குச் சென்றுள்ளார். அவர் தெரிவிக்கும் தகவல்களையும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் தெரிவிப்பேன். நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.
இதைத் தொடர்ந்தும் அமளி நீடிக்கவேசபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications