கிடைத்த தகவலை சொன்னேன்..: ராஜ்யசபாவில் ஆண்டனி விளக்கம்! பிரதமருடன் ஆலோசனை!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானது தொடர்பான தமக்கு கிடைத்த தகவலையே நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன் என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் என்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நேற்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தெரிவித்தார். ஆனால் முன்னதாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கின. முன்னதாக காலையில் ஏ.கே. ஆண்டனி சபைக்கு வரவில்லை. பின்னர் பகலில் சபைக்கு வந்த போது இதே பிரச்சனையை எம்.பிக்கள் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவர், எனக்குக் கிடைத்த தகவலை இந்த சபைக்குத் தெரிவித்தேன். தற்போது ராணுவ தலைமை தளபதி நிகழ்விடத்துக்குச் சென்றுள்ளார். அவர் தெரிவிக்கும் தகவல்களையும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் தெரிவிப்பேன். நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.
இதைத் தொடர்ந்தும் அமளி நீடிக்கவேசபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications